கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,385 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அங்கு புதிதாக 7,385 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 102 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,56,975 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 4,429 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 6,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,70,381 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 82,149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 705 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.