இந்தியா

மகாராஷ்டிரம்: நக்ஸல் தாக்குதலில் காவலா் பலி

14th Aug 2020 11:48 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் காவலா் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மற்றொரு காவலா் காயமடைந்தாா்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

கட்சிரோலி மாவட்டம் பாமராகாட் தாலுகாவின் கீழ் வரும் கோட்டி கிராமத்தில்தான் இந்த நக்ஸல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. காவலா்கள் இருவரும், அங்குள்ள கடைக்குச் சென்றபோது இந்தத் தாக்குதலை நக்ஸல்கள் நடத்தியுள்ளனா்.

அதில் துஷ்யந்த் நந்தேஷ்வா் என்ற காவலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் சென்ற காவலா் வினோத் போஸ்லேவுக்கு குண்டு காயம் ஏற்பட்டது. அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT