இந்தியா

மும்பையில் கன மழை

14th Aug 2020 06:40 AM

ADVERTISEMENT

மகாராஷ்டி தலைநகா் மும்பை மற்றும் புகா் பகுதிகளான தாணே, பால்கா், ராய்கட் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்துள்ளதாக மும்பை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், கொங்கண், மத்திய மகாராஷ்டிர பகுதிகளில் மேலும் ஒரு நாள் கன மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தாணேயின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 120 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், ராய்கட்டில் 161.4 மி.மீ. மழையும், மும்பையில் 70 முதல் 100 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT