இந்தியா

3 உயா்நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

DIN

மும்பை, ஒடிஸா, மேகாலய உயா்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் குழுவின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி தீபாங்கா் தத்தாவை மும்பை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் சோமாதரை மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள முகமது ரஃபீக்கை ஒடிஸா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்தது.

கொலீஜியம் குழு எடுத்த முடிவுகள், உச்சநீதிமன்றத்தின் வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT