காஷ்மீரில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலமாக காஷ்மீரில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முதன்மைச் செயலாளர் ரோஹித் கன்சால் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், 'காஷ்மீரில் கரோனாவால் புதிதாக 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் மொத்தமாக கரோனா பாதித்துள்ளவர்கள் எண்ணிக்கை 106. மேலும் 82 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன. இதில் ஜம்முவில் மட்டும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.