இந்தியா

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

DIN

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 பேர் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர்.
பெங்களூரு, ஆளுநர் மாளிகையில் செப். 23-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக வழக்குரைஞர்களான சிங்கபுரம் ராகவாச்சார் கிருஷ்ணகுமார்,  அசோக் சுபாஷ்சந்திரகினகி,  சூரஜ் கோவிந்த்ராஜ், சச்சின் சங்கர் மகதம் ஆகிய 4 பேர் பதவியேற்க இருக்கிறார்கள்.  இவர்களுக்கு ஆளுநர் வஜுபாய்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில்,  முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர்கள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயணா, லட்சுமண்சவதி, அமைச்சர்கள், கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஹோகா, நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT