இலங்கையில் போதைப் பொருள் கடத்திய 2 இந்தியர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

இலங்கையில் போதைப் பொருள் கடத்திய 2 இந்தியர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


இலங்கையில் போதைப் பொருள் கடத்திய 2 இந்தியர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து இலங்கை காவல் துறை செய்தித்தொடர்பாளர் ருவன் குணசேகரா கூறியதாவது:
லெப்பை ஜலாலுதீன் மொஹிபீன் மொஹதீம், தனிவேல் மணி ஆகிய 2 இந்தியர்களும் கடந்த 2016ஆம் ஆண்டு போதைப் பொருளைக் கடத்திச் சென்றதாக  இலங்கை சுங்க வரித் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் இலங்கை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீர்கொழும்பு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது என்று ருவன் குணசேகரா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com