சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக, மேற்கு வங்க சிஐடி கூடுதல் தலைமை இயக்குநரும், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருமான ராஜீவ் குமார், சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகவில்லை. அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் கொல்கத்தாவிலிருந்து வேறெங்கும் சென்றுவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் 2 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.