புது தில்லி: இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது தொடர்பான விடியோ பொதுமக்களுக்காக பகிரப்பட்டுள்ளது.
ஜூலை 31ம் தேதி - ஆகஸ்ட் 1ம் நள்ளிரவில் ஜம்மு காஷ்மீர் எல்லையான கெரன் செக்டார் பகுதியில் நடந்த பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சியை மேற்கொள்ளும் குழுவின் ஊடுருவல் நடவடிக்கை இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பான 2 நிமிட விடியோ வெளியாகியுள்ளது. அதில், 4 உடல்கள் காணப்படுகின்றன.
முன்னதாக இதேப்போன்ற ஊடுருவல் முயற்சியின் போது சுமார் 5 முதல் 7 ஊடுருவல்காரர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, இந்த ஊடுருவல்காரர்கள் என்பது பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர்களாகவோ, பயங்கரவாதிகளாகவோ இருப்பார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.