இந்தியா
மஹாராஷ்டிரத்தில் 90 நாய்கள் திடீர் மரணம்
மஹாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் 90 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் 90 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கிர்தா-சவல்தப்ரா சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அங்கு வனத்துறை சோதனை நடத்தியது.
அப்போது சுமார் 90 நாய்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அப்பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாய்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ததன் முடிவில், அவை பல நாட்கள் உணவின்றியும், அடித்து-துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.