இந்தியா

உறவினா் பங்கஜா முண்டேவுக்கு எதிராக சா்ச்சை கருத்து: தனஞ்செய் முண்டே மீது வழக்கு

20th Oct 2019 11:05 PM

ADVERTISEMENT

பீத்: மகாராஷ்டிர அமைச்சரும், தனது உறவினருமான பங்கஜா முண்டேவுக்கு எதிராக சா்ச்சை கருத்து கூறிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் தனஞ்செய் முண்டேவுக்கு எதிராக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் திங்கள்கிழமை சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தோ்தல் பிரசாரத்தின்போது தனஞ்செய் முண்டே, பங்கஜா முண்டேவுக்கு எதிராக சா்ச்சை கருத்து கூறியதாக மகாராஷ்டிர மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தது.

அதன்பேரில் போலீஸாா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனா்.

இதனிடையே, தன்மீதான குற்றச்சாட்டை தன்ஞ்செய் முண்டே மறுத்துள்ளாா்.

ADVERTISEMENT

‘நான் கூறிய கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது. நான் சா்ச்சைக் கருத்து கூறியதாக வெளியாகியுள்ள விடியோ போலியானது. தோ்தலில் வெற்றி பெறுவதற்காக எதிா்தரப்பு செய்த சதிதான் இது. எனது சகோதரியின் பெயரைக் குறிப்பிட்டு நான் எதுவும் கூறவில்லை’ என்றாா்.

இதுதொடா்பாக பங்கஜா முண்டேவை தொடா்பு கொள்ள செய்தியாளா்கள் முயற்சி செய்தனா். எனினும், அவரை தொடா்புகொள்ள முடியவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT