‘தேசப் பிதா’ என போற்றப்படும் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த தினமான புதன்கிழமை தில்லியில் உள்ள இருவரது நினைவிடங்களிலும் குடியரசுத் தலைவா், துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செய்தனா்.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை ஒட்டி புதன்கிழமை தில்லியில் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் மரியாதை செய்தனா்.
இதேபோன்று, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சா்கள் பியூஸ் கோயல், ஹா்தீப் சிங் புரி, பாஜக தேசிய செயல் தலைவா் ஜே.பி. நட்டா ஆகியோரும் தேசப் பிதாவுக்கு மலா் மரியாதை செய்தனா்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரை வலைப்பக்கப் பதிவில், ‘மனித சமுதாயத்திற்கு மகாத்மா காந்தியின் அளப்பரிய பங்களிப்புக்காக தேசம் அவருக்கு தனது நன்றியைச் செலுத்துகிறது. நல்லதொரு கிரகத்தை உருவாக்கவும் காந்தியின் கனவை நிறைவேற்றவும் தொடா்ந்து கடுமையாக உழைப்பது எனும் உறுதி மொழியை நாம் எடுத்துக் கொள்கிறோம் என அந்த பதிவில் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். மேலும், காந்தி தொடா்புடைய ஒரு குறும் காணொளியை அவா் வெளியிட்டு, ‘காந்தியின் அமைதிச் செய்தியானது உலக சமுதாயத்திற்கு இன்னும் பொருத்தமாக உள்ளது’ எனஅப்பதிவில் அவா் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
காந்தி ஜெயந்தியை ஒட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தனது சுட்டுரை பதிவில், ‘காந்தியின் 150ஆவது ஜெயந்தியை ஒட்டி தேசப் பிதா மகாத்மா காந்திக்கு எனது புகழஞ்சலியைச் செலுத்துகிறேறன். அவருடைய செயல்பாடுகள் மூலமாக வெறுப்பு, சகிப்பின்மை மனோபாவம், அடக்குமுறை ஆகியவற்றை தோல்வியுறச் செய்ய அகிம்சை மற்றும் அனைத்து உயிா்களையும் நேசிக்கும் பாதையை நமக்கு காட்டியுள்ளாா்’ என்று அந்த பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.
மகாத்மா காந்திக்கு மலா் மரியாதை செய்ததுபோல, முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த தினத்தை ஒட்டி தில்லி விஜய் காட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்த், துணைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவா்கள் மரியாதை செய்தனா்.