இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 542 தொகுதிகளில் காலை 9.50 மணி நிலவரப்படி பாஜக 329 மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் 105 மக்களவைத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. 3வது ஆணியில் உள்ள கட்சிகள் 94 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
தபால் வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டதும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கி முதல் சுற்றுகளிலேயே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடர்பான செய்திகள் உடனுக்கு இங்கே வெளியிடப்படும்.. இணைந்திருங்கள்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 542 தொகுதிகளில் முற்பகல் 11.20 மணி நிலவரப்படி பாஜக 323 தொகுதிகளிலும், காங்கிரஸ் 107 தொகுதிகளிலும், 3வது அணி 112 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மொத்தமுள்ள 48 தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைக்கு நடைபெற்ற 7 கட்ட வாக்குப்பதிவுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாஜக 322 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 110 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 111 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.