உண்மைக்காக போராடும் நமக்கு அடுத்த 24 மணிநேரம் முக்கியமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் புதன்கிழமை எச்சரித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது:
காங்கிரஸ் தொண்டர்களே, அடுத்த 24 மணிநேரம் நமக்கு மிகவும் முக்கியமானது. எதற்கும் அஞ்சாமல் தைரிமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் நாமெல்லாம் உண்மைக்காக போராடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், போலியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைக் கண்டு யாரும் ஏமாற்றமடைய வேண்டாம். உங்கள் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் நம்பிக்கை வைத்திருங்கள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும் வீண்போகாது என குறிப்பிட்டுள்ளார்.