இந்தியா
கேதார்நாத்தில் பிரதமர் மோடி வழிபாடு
உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி சனிக்கிழமை வழிபாடு செய்தார்.
கேதார்நாத்: உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி சனிக்கிழமை வழிபாடு செய்தார்.
மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறவுள்ளது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி உள்பட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்தச் சூழலில், அவர் கேதார்நாத் கோயிலில் சனிக்கிழமை வழிபாடு நடத்தினார்.
பிரதமரின் வருகை தொடர்பாக, உத்தரகண்ட் காவல்துறை டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) அசோக் குமார் கூறுகையில், "ஜாலி கிராண்ட் விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை பிரதமர் மோடி வந்தார்.
அதையொட்டி, பலத்த பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன' என்றார்.
கடந்த 2 ஆண்டுகளில் கேதார்நாத்துக்கு மோடி வருவது இது
4-ஆவது முறையாகும்.
கேதார்நாத் கோயிலைத் தொடர்ந்து, பத்ரிநாத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் வழிபாடு செய்கிறார்.