டாக்கா: மேற்கு வங்கத்தைப் புரட்டிப்போட்டுவிட்டு, அடுத்த இலக்காக நமது அண்டை நாடான வங்கதேசத்தை அடைந்துள்ளது ஃபானி புயல்.
ஃபானி புயலால் ஏற்பட்ட சூறாவளி, கன மழையில் சிக்கி வங்கதேசத்தில் மட்டும் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தில் ஃபானி புயலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சுமார் 16 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், 36 கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.