தில்லி மோதி நகர் பகுதியில் பேரணியில் ஈடுபட்ட அரவிந்த் கேஜரிவால் மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி மோதி நகர் பகுதியில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பேரணியில் ஈடுபட்டார். அப்போது இளைஞர் ஒருவர் அரவிந்த் கேஜரிவால் பேரணி வாகனத்தின் மீது ஏறி அவரை தாக்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தில்லியில் மே 17-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.