இந்து என்.ராமை மத்திய அரசு மிரட்டுகிறது: சந்திரபாபு நாயுடு ட்வீட்

இந்து பத்திரிகை என்.ராமை மத்திய அரசு மிரட்டுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். 
இந்து என்.ராமை மத்திய அரசு மிரட்டுகிறது: சந்திரபாபு நாயுடு ட்வீட்

இந்து பத்திரிகை என்.ராமை மத்திய அரசு மிரட்டுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதற்கு பதிலாக அரசியலமைப்பிற்கு விரோதமாக செயல்பட்டு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

முதலில் உச்ச நீதிமன்றம் அடுத்து மக்கள் என அனைவரையும் இதில் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். நாட்டின் அமைப்புகளை அழித்து வருகின்றனர். இந்து என்.ராமை மிரட்டி, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com