நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்காலம் நீட்டிப்பு

நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் கந்த் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்காலம் நீட்டிப்பு


நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் கந்த் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அமிதாப் கந்த், 1980-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர், பிப்ரவரி 2016-இல் நீதி ஆயோக்கின் முழு நேர தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். இவருடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு, நியமனக் குழுவால் இவருடைய பதவிக்காலம் ஜூன் 30, 2019 வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இவருடைய பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், 

"ஏற்கெனவே ஒப்புக்கொண்டதன்படி, அதே நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் கந்த் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள், அதாவது ஜூன் 30, 2021 வரை நீட்டிக்க நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com