பொது இடத்தில் புகைப்பிடித்த நடிகருக்கு அபராதம்

பொது இடத்தில் புகைப்பிடித்த காரணத்துக்காக தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் பொதிநேனிக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் புகைப்பிடித்த நடிகருக்கு அபராதம்


பொது இடத்தில் புகைப்பிடித்த காரணத்துக்காக தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் பொதிநேனிக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலக இளம் நாயகர்களில் ஒருவராக விளங்கும் ராம் பொதிநேனி, பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஹைதராபாதில் அவர் பங்கேற்ற திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த திரைப்பட படப்பின் இடைவெளி நேரத்தில் ராம் பொதிநேனி புகைப்பிடித்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி காவல்துறையினர், நடிகர் ராம் பொதிநேனிக்கு ரூ.200 அபராதம் விதித்து அதற்கான ரசீதை அளித்தனர். அந்தத் தொகையை திரைப்பட தயாரிப்பாளர், பின்னர் செலுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com