இந்தியா

ஆதார் அட்டையில் ஜாதி பெயர் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்

ENS


குண்டூர்: சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்று ஒரு நகைச்சுவை காட்சி சினிமாவில் இடம்பெற்றிருக்கும்.

அதுபோல, மணப்பெண்ணின் ஆதார் அட்டையில் ஜாதி பெயர் இல்லாததால், திருமணத்தையே நிறுத்தியுள்ளார் ஒரு மணமகன்.

இது குறித்து மணமகள் வீட்டார் க்ரோசுரு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல் திருமணத்தை நிறுத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ பிரமரம்பா மல்லேஸ்வரா சுவாமி கோயிலில் இந்த திருமணம் நடக்கவிருந்தது. மணமக்களின் ஆதார் அட்டைகளை கோயில் பூசாரி கேட்டிருந்தார். கோயிலில் பதிவு செய்ய ஆதார் அட்டைக் கொடுத்த போது, மணமகளின் ஆதார் அட்டையில் ஜாதி பெயர் இல்லாதது குறித்து பூசாரி கேள்வி எழுப்ப, அதையே மணமகன் வீட்டார் பெரிதுபடுத்திவிட்டனர்.

இது குறித்து மணமகள் வீட்டார் உரிய விளக்கம் அளித்தும் அதனை ஏற்க மறுத்த மணமகன் வீட்டார், திருமணத்தை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டனர்.

மணமகள் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT