கை விரல் பாதிப்பு காரணமாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
நீண்டகால வாலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து போபாலில் உள்ள ஹமிதியா அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பகல் 11 மணியளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்த வலது கை விரல் பகுதியில் கமல்நாத்துக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவர் உடல் நலம் தேறி வருவதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் நரேந்திர சலூஜா தெரிவித்தார்.