மேற்கு வங்கத்தில் வெடித்தது மருத்துவர்களின் போராட்டம்: புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது

இளநிலை மருத்துவர்களின் போராட்டத்தில் அரசு மூத்த மருத்துவர்களும் பங்கேற்றதால் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று அரசு மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் வெடித்தது மருத்துவர்களின் போராட்டம்: புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது

கொல்கத்தா: இளநிலை மருத்துவர்களின் போராட்டத்தில் அரசு மூத்த மருத்துவர்களும் பங்கேற்றதால் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று அரசு மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

கொல்கத்தா மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதால், அவரது உறவினர், மருத்துவரைத் தாக்கியதைத் தொடர்ந்து இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், இளநிலை மருத்துவர்களுடன் மூத்த அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்ததால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com