லண்டனில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை போட்டியை காண வந்ததாக விஜய் மல்லையா கூறினார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது மைதானத்தின் வெளியே பண மோசடி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா இருந்தார்.
இந்நிலையில், அவரிடம் ஏஎன்ஐ செய்தியாளர் கேள்வி எழுப்பச் சென்ற போது, நான் இங்கு கிரிக்கெட் போட்டியை காண வந்துள்ளேன் என்று தெரிவித்துவிட்டு சட்டென்று மைதானத்தின் உள்ளே சென்றுவிட்டார்.