காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த முதல்வரும், தில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று (சனிக்கிழமை) காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி: ஷீலா தீட்சித்தின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தில்லியின் வளர்ச்சிக்கு இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: காங்கிரஸ் கட்சியின் அன்பு மகளான ஷீலா தீட்சித்தின் மறைவை கேட்டு உடைந்துபோனேன். மூன்று முறை தில்லி முதல்வராக தன்னலமற்று ஆட்சி புரிந்தார். அவரது குடும்பத்தினருக்கும், தில்லி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்: ஷீலா தீட்சித்தின் மறைவு தில்லிக்கு மிகப் பெரிய இழப்பு. தில்லிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது இரங்கல்