மகாராஷ்டிர மாநிலம், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டன.
2005ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பையில் மிக அதிக அளவு மழை பெய்தது இந்த ஆண்டில்தான். மழை காரணமாக பல்வேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளான தானே, ராய்கட் மற்றும் பால்கர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜூலை 9 மற்றும் 10-ஆம் தேதி முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.