பிரதமர் மோடிக்காக நாட்டுப்புற இசைக்கலைஞர் அர்ப்பணித்த பாடலின் விடியோ

பிரதமர் நரேந்திர மோடிக்காக குஜராத் நாட்டுப்புறை இசைக்கலைஞர் பாடல் ஒன்றை அர்ப்பணித்தார். 
பிரதமர் மோடிக்காக நாட்டுப்புற இசைக்கலைஞர் அர்ப்பணித்த பாடலின் விடியோ

பிரதமர் நரேந்திர மோடிக்காக குஜராத் நாட்டுப்புறை இசைக்கலைஞர் பாடல் ஒன்றை அர்ப்பணித்தார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை திங்கள்கிழமை சந்தித்த பின்னர் குஜராத் நாட்டுப்புற இசைக்கலைஞர் கீதா ராப்ரி கூறுகையில்,

வனப்பகுதியில் வாழும் மல்தாரி பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர் நாங்கள். எனது தந்தைக்கு பிரதமரின் பெண் குழந்தைகள் கல்வித் திட்டம் தொடர்பான கடிதம் வந்தது. அதனால் தான் அவர் என்னை பள்ளியில் சேர்த்தார். 

நான் சிறுமியாக இருக்கும்போது பிரதமர் மோடியை சந்தித்தேன். அப்போது எனது பள்ளியில் நான் பாடியதை பாராட்டி எனக்கு ரூ.250 பரிசளித்தார். மேலும் பாடுவதற்கு தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளுமாறு கூறி ஊக்கப்படுத்தினார் என்று தெரிவித்து பிரதமர் மோடிக்காக ஒரு பாடலை அர்ப்பணிப்பதாகக் கூறி பாடினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com