சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் புதிய மாற்றம்

அடுத்த ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் மாற்றம் கொண்டு வரவிருப்பதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் புதிய மாற்றம்


அடுத்த ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் மாற்றம் கொண்டு வரவிருப்பதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.
2020-ஆம் ஆண்டில் இருந்து 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வு 2 நிலைகளாக நடைபெற உள்ளது. கணிதத்தில் பலவீனமாக உள்ள மாணவர்களும் அதிக மதிப்பெண்களைப் பெறும் வகையில், கணிதம்-அடிப்படை, கணிதம்-உயர்தரம் (ஸ்டேண்டர்டு) என்று இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடினமான பாடங்களை தேர்வுக்கு படிக்கும்போதும், அதன் முடிவுகள் வெளியிடப்படும்போதும் மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அதைக் கருத்தில் கொண்டு, கணிதத்தில் பலவீனமாக இருக்கும் மாணவர்களும் அதிக மதிப்பெண்களைப் பெறும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. 
2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு கணிதம்-அடிப்படை, கணிதம்-உயர்தரம்(ஸ்டேண்டர்டு) என்று 2 விதமான கணிதத் தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டம், கற்பித்தல், வகுப்புத் தேர்வுகள் என அனைத்தும் 2 தேர்வுகளுக்கும் ஒரேமாதிரியாகதான் இருக்கும். அதனால் மாணவர்கள் பாடத்திட்டத்தை முழுவதும் படிப்பதுடன், இறுதியில் தங்களது திறமைக்கேற்றவாறு தேர்வை தேர்ந்தெடுத்து அதிக மதிப்பெண்களும் பெற இயலும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கணிதம்-அடிப்படை தேர்வு எளிதாகவும், கணிதம்-உயர்தரம் தேர்வு சிறிது கடினமாகவும் இருக்கும். கணிதத்தில் உயர்கல்வி பயில விரும்பாத மாணவர்கள் அடிப்படை கணிதத் தேர்வை தேர்ந்தெடுத்து அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் இம்முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com