காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து பிவானி நகருக்கு புறப்பட்ட காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடித்தது. இதில், யாரும் காயமடையவில்லை.


உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து பிவானி நகருக்கு புறப்பட்ட காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடித்தது. இதில், யாரும் காயமடையவில்லை.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கான்பூரிலிருந்து ஹரியாணா மாநிலம், பிவானி நகருக்கு காலிந்தி விரைவு ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் குண்டு வெடிப்பு நேரிட்டது. முன்பதிவில்லா பெட்டியில் உள்ள கழிப்பறையில் புதன்கிழமை இரவு 7.10 மணிக்கு குண்டு வெடித்தது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. பட்டாசுகள் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.  தடயவியல் நிபுணர்கள் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிராஜ்பூர் ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டு வெடித்த கழிப்பறைக்கு அருகே இருந்த ஒரு கைப்பை கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் வெடிப்பொருள்கள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, ரயில் புறப்பட்டுச் செல்லும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com