புனேவில் பாலம் அமைக்கும் பயிற்சியின்போது 2 ராணுவ வீரர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ராணுவ பொறியியல் கல்லூரியில் பாலம் அமைக்கும் பயிற்சியில் ராணுவ வீரர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.