இந்தியா

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்: டிசம்பர் 29-இல் பதவியேற்பு!

DIN


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) செயல் தலைவர் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்முவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேஎம்எம் 30 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, ஜேஎம்எம் - காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஹேமந்த் சோரன் டிசம்பர் 27-இல் பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று மாலை புதிதாகத் தேர்வான ஜேஎம்எம் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜேஎம்எம் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜேஎம்எம் தலைவர் ஷிபு சோரன் இல்லத்தில் கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, இரவு 8.45 மணிக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்முவைச் சந்தித்த ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன்மூலம், டிசம்பர் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT