எல்லையில் பாக். அத்துமீறல்: இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.


ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரஜெளரி மாவட்டத்தில் நெளஷேரா செக்டாருக்கு உள்பட்ட கல்சியா கிராமத்தில் உள்ள ராணுவ நிலை அருகே ரஜீப் தாபா(34) என்ற ராணுவ வீரர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை எல்லைக் கோட்டுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பலத்த காயமடைந்த ரஜீப் தாபா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இருப்பினும், பாகிஸ்தான் தரப்பில் யாரேனும் உயிரிழந்தார்களா என்று உடனடியாகத் தெரியவில்லை.
ரஜீப் தாபா, மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மெச்பாரா கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு குஷ்பு மங்கர் தாபா என்ற மனைவி இருக்கிறார் என்றார் அந்த அதிகாரி.
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குப் பிறகு, ரஜெளரி, பூஞ்ச் மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் சிறிய ரக பீரங்கி குண்டுகளைக் கொண்டு அத்துமீறி தாக்குதல் நடத்துவது, இது நான்காவது சம்பவமாகும். 
இந்த சம்பவங்களில் இதுவரை 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com