புது தில்லி: உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நிலவுவதை உறுதிப்படுத்தும் விதமாக உன்னாவ் வழக்குகளை தில்லிக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அமைந்துள்ளதாக பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை தொடர்புடைய 5 வழக்குகளையும் உத்தரப் பிரதேசத்திலிருந்து தில்லி நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் வியாழனன்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நிலவுவதை உறுதிப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளதாக பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உத்தரபிரதேச மாநிலத்தில் காட்டாட்சி நிலவுவதையும், மாநில பா.ஜனதா அரசு இந்த விவகாரத்தில் தோல்வி அடைந்து உள்ளதையும் உறுதிப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத் முத்திரை குத்தப்பட்டு இருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்தீப்சிங் செங்கர் எம்.எல்.ஏ.வை தற்போது கட்சியில் இருந்து நீக்கியதன் மூலம் ஒரு குற்றவாளிக்கு பாதுகாப்பு அளித்துள்ளதை பாஜக ஒப்புகொண்டுள்ளது.
இதன்மூலம் தனது தவறை சரி செய்ய குறைந்தபட்சம் ஒரு படியை எடுத்து வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.