யோகா செய்வதால் உடல் நலம் மட்டுமல்லாமல் மன நலமும் மேம்படும். அதிலும் சர்வ அங்க ஆசனம் செய்வதால் ஒருவரது மூளைத் திறன் அதிகரிக்கும் என்கிறது ஆய்வுகள். சர்வம் என்றால் அனைத்து என்று பொருள். அங்கம் என்றால் அவயங்கள் என்று பொருள். உடலிலுள்ள அனைத்து அவயங்களும் ஆரோக்கியம் வழங்கும் ஆசனம் என்பதால் சர்வ அங்க ஆசனம் (சர்வாங்காசனம்) என்று பெயர் பெற்றது இந்த ஆசனம்.
இந்த ஆசனத்தின் செய்முறை
இதனை மூன்று முறை செய்யவும்.
உடல் முழுவதும் தலைகீழாக நிறுத்தப்பட்டிருப்பதால் அனைத்துப் பகுதிகளும் முழுமையான ரத்த ஓட்டம் நடைபெறும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து தினமும் செய்தால் பியூட்ரி, பீனியல், ஹைப்போதாலமஸ், தைராய்ட், பாரா தைராய்ட், தைமல், பான்க்ரியா, அட்ரினல் என அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இந்த சுரப்பு நீர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடும்.