பெண்களே உஷார்! சானிடரி நாப்கினில் பெரிய ஆபத்து உள்ளது! (விடியோ)

பெண்கள் இருக்கும் வீடுகளில் நாப்கின் அவசியம் இருக்கும். மாதாந்திர மளிகை லிஸ்டில் அதுவும் இடம்பெறும்.
பெண்களே உஷார்! சானிடரி நாப்கினில் பெரிய ஆபத்து உள்ளது! (விடியோ)

பெண்கள் இருக்கும் வீடுகளில் நாப்கின் அவசியம் இருக்கும். மாதாந்திர மளிகை லிஸ்டில் அதுவும் இடம்பெறும். அத்தியாவசியப் பொருளான அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இங்கு பார்க்கப் போகிறோம். 

16 வருடங்களுக்கு முன் The United States of America, Hwaii யில் Honolulu என்னும் நகரத்தில் உள்ள Ala wai Golf Course Club house ல் 08.05.2002 அன்று The vegetarian society of Hwaii என்னும் NGO அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் Dr.Edward.K.Fujimoto,PH,MPH,CHES என்னும் மருத்துவ ஆராய்ச்சியாளர் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு ரசாயனத்தை பற்றி ஒரு மணி நேரம் விரிவாக பேசியுள்ளார்.

இவர் Castle Medical Centre ல் Wellness Manager & Clinical Preventive care & Lifestyle Medicine Specialist ஆக பணியாற்றி வருகிறார். அது என்ன ரசாயனம்? அவர் என்ன பேசினார்? என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

அவர் பேசிய ரசாயனத்தின் பெயர் Dioxin!

Dioxin என்னும் ரசாயனம், Group of 75 Chlorinated Hydrocarbon Chemicals-ல் ஒரு வகையை சேர்ந்தது. ஒரு நாட்டில் ராணுவ சண்டை வரும் வரை எப்படி அந்நாட்டில் Terrorist இருப்பதே தெரியாதோ, அது போல் தான் இந்த Dioxin எனும் ரசாயனமும் உடலில் இருப்பது தெரியாது என்கிறார். 

இந்த Dioxin ரசாயனம் எங்கிருந்து வருகிறது?  எதில் எல்லாம் கலந்துள்ளது என்பதை பார்ப்பதற்கு முன், இவை இப்பூவுலகிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

Dioxin என்னும் ரசாயனத்திற்கு Expose ஆன காட்டு விலங்குகளை பல வருடம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இவர் கண்டறிந்த பாதிப்புகள், 

  • சமச்சீரற்ற ஹார்மோன் அளவுகள்.
  • குறைந்த கருவுறுதல்.
  • மீன்களின் கரு முட்டை வளர்ச்சி குறைந்து இனப்பெருக்கம் குறைந்தது.
  • பறவைகளின் இனப்பெருக்கம் குறைந்து. முட்டை ஓடுகள் லேசானது.
  • மாறுபட்ட பாலுணர்வு செயல்கள். gulls என்னும் பெண் பறவை இன்னொரு பெண் பறவையுடன் பாலுணர்வுகொள்ள முயற்சி, இது California வில் நடந்தது.
  • நோய் எதிர்ப்பு சக்தியில் மறுகட்டமைப்பு.
  • பெண் மீன்களுக்கு, ஆண்தன்மை அதிகரித்து, இருபால் கலந்த மீன்கள் பெரிய ஏரிகளில் உள்ளது.
  • ஆண் முதலைகளுக்கு, பெண்தன்மை அதிகரித்து, ஆண்குறி மற்றும் விதைப்பை அளவுகள் குறைந்து காணப்படுகிறது.
  • முதலைகளளின் விதைப்பையில், வம்சாவளி வந்த விதைகள் மாறுபட்டுள்ளது.
  • ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய்.
  • கரு முட்டை குழாய், கருப்பை, கருப்பை வாய் தவறான வடிவமைப்பில் உருவாகி உள்ளது.
  • எலும்பின் அடர்த்தி மற்றும் வடிவமைப்பு மாறுபட்டுள்ளது.

Florida வில் panther என்னும் கருஞ்சிறுத்தையின் ஹார்மோன் சோதித்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் சிறுத்தையின் உடலில், ஆண் ஹார்மோனை விட பெண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. பெண் சிறுத்தையின் உடலில், பெண் ஹார்மோனை விட ஆண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. ஹார்மோன்கள் தலைகீழாக மாறி இருந்தததையும், அனைத்தும் ஹார்மோன் தொடர்புடைய பிரச்னைகளாகவே இருந்ததையும் கண்டு அதிர்ந்து போனார்.

மேலும் ஆராய்ந்ததில், Dioxin அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது இனப்பெருக்கத்தில் பிரச்னை உருவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கிறது, ஹார்மோன்களில் பிரச்னை உருவாக்கி புற்றுநோய் வரவழைக்கிறது.

Dioxin புற்றுநோயை உருவாக்கும் என்று Environment Protection Agency 1985-ல் கண்டுபிடித்தது. பின் 1991-ல் Dioxin ரசாயனத்தால் ஆயிரத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தது. பின் இந்த தகவல் வெளி வராமல் மூடி மறைக்கப்பட்டது.

1971-ல் Missouri என்ற இடத்தில் தூசியை (Dust) குறைப்பதற்காக கழிவு எண்ணெய் Spray செய்யப்பட்டது. அதில் Dioxin இருந்துள்ளது. எண்ணி பன்னிரண்டே வருடத்தில் 1971-ல் அந்த நகரமே அழிந்து போனது.

Dioxin எந்த அளவு நச்சு என்றால் சயனைட்டை விட 130 மடங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. CYANIDE destroyes human cells and amount others lead to heart respiratory systems & Central nervous system failure. 900 மடங்கு ARSENIC ஐ விட நச்சானது. இது தோல் புற்றுநோயை ஏற்படுத்தும்.

Killer cell செயல்திறனை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை ஒடுக்குகிறது.

தவறான நேரத்தில் ஹார்மோன்களை செயல்படுத்தவும், முடக்கவும் செய்கிறது.

இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகளை தடுக்கிறது.

தவறான நேரத்தில் தவறான ஹார்மோனை தூண்டுகிறது அல்லது சரியான ஹார்மோனை தவறான நேரத்தில் தூண்டிவிடுகிறது.

எலும்பு மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம், Respiratory system, Reproductive system, Immune system, Digestive system என ஒட்டு மொத்த மண்டலத்தையும் பாதிக்கிறது.

இத்தனை ஹார்மோன் பாதிப்புகளை உருவாக்கும் இந்த Dioxin மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு வெளியிடுகிறார். இதோ.

Dioxin ற்கு Exposure ஆன மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

ஆண்களுக்கு

  • விந்தணு உற்பத்தி குறைகிறது என்று பல்வேறு நாடுகளுடைய 61 ஆராய்ச்சிகள் 1992 ஆம் ஆண்டு வெளியானது.
  • 1938 ஆம் ஆண்டுகளில் 113 மில்லியன் per ml இருந்த விந்தணு, 1990 களில் 66 மில்லியன் per ml ஆக குறைந்துள்ளது. US ல் 50% விந்தணு குறைபாடு ஏற்பட்டுள்ளது.
  • டென்மார்க்கில் 1945 ல் இருந்து விதைப்பை புற்றுநோய் 1990 ல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது போலவே பல்வேறுநாடுகளிலும் அதிகரித்து காணப்படுகிறது.
  • ஆண் உறுப்பு மற்றும் விதைப்பை அளவு குறைந்துள்ளது.
  • De masculinization, ஆண்மை அழிப்பு வேலை நடக்கிறது.

பெண்களுக்கு

  • மார்பகப் புற்றுநோய் 339 நாடுகளில் இது அதிகரித்துள்ளது
  • மார்பகத்தில் Fibroid கட்டிகள். 
  • Polycystic ovary, கரு முட்டைப்பையில் நீர்கட்டிகள்
  • கருப்பை Fibroid கட்டிகள்
  • குறுகிய மாதவிடாய் காலம்
  • கருவுருதலில் தாமதம்
  • முன்கூட்டியே பூப்பெய்தல்
  • Masculinization என்னும் ஆண்தன்மை அதிகரிப்பு

காட்டு விலங்குகளுக்கு ஏற்பட்ட அதே பிரச்னை மனிதர்களுக்கும் ஊடுருவியுள்ளதை கண்டு அதிர்ந்து போனார். 

இவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்த DIOXIN எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்.

  • ரசாயனம் தயாரிப்பு தொழிற்சாலை. 
  • குப்பைகளை எரிக்கும் போது
  • பூச்சிக்கொல்லி, பூஞ்சானக்கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலைகள்
  • Plastic பொருட்களை சூடு செய்யும் போதும் எரிக்கும் போதும்
  • அசைவ உணவுகள் (Dioxin stick to fatty tissues)
  • சில கழிவு எண்ணெய்களை எரிக்கும் போது
  • மருத்துவக்கழிவுகளில் இருந்து

நாப்கின்

என்னடா, நாப்கினை பற்றி சொல்கிறேன் என்று ஏதேதோ கூறிக் கொண்டிருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா. சரி வாருங்கள் இப்பொழுது நாப்கினை பற்றி பார்ப்போம்.

நாப்கின் நமக்கு அறிமுகமாகாத கால கட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தி துணியை பயன்படுத்தி வந்தார்கள், சிலர் துவைத்து பயன்படுத்துவர், சிலர் எரிப்பார்கள், சிலர் துணியை புதைத்து விடுவார்கள்.

அப்பொழுது கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த வசந்த காலத்தில் நம் பெண்கள் பத்து பதினைந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள், ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

துணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா? அல்லது நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா?

இதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் எப்பொழுது நாப்கின் என்னும் நஞ்சு இம்மண்ணிற்கு அறிமுகமாகியதோ, அப்பொழுதுதான் கருப்பை பிரச்சனைகளும் நம் பெண்களுக்கு அறிமுகமாகியது என்ற உண்மை புலப்படும்.

சரி வாருங்கள் இப்பொழுது நாப்கினின் மூலப்பொருள் என்ன? அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

நாப்கின் மூலப்பொருள்

  • கச்சா எண்ணெய் (petroleum product)
  • குப்பை காகிதங்கள்
  • பழைய அட்டைகள்
  • மரக்கூழ்
  • நெகிழி (plastic)
  • பூச்சி மற்றும் பூஞ்சானக்கொல்லி
  • நறுமணப்பொருட்கள் (Fragrances)

பெண்களே இதை அனைத்தையும் சேர்த்துத்தான் உங்கள் உடலிலேயே சென்சிடிவ் ஆன பகுதியில் வைக்கிறீர்கள். 

நாப்கின் எப்படி தயாரிக்கப்படுகிறது? 

நாப்கினை தயாரிப்பதற்கு முன் அதனுள் வைக்கப்படும் பஞ்சை முதலில் தயாரிப்பார்கள். Cotton என்று நினைக்கறீங்களா ? அதுதான் இல்லை.

பழைய காகிதங்கள், அட்டை பெட்டி சாமான்கள், மரக்கட்டைகள், இதை எல்லாம் பிரம்மாண்ட கலன்களில் நீர் மற்றும் சில ரசாயனங்களை சேர்த்து கொதிக்க வைத்து கூழாக்குவார்கள். பிறகு இந்த கூழில் பல்வேறுவிதமான ரசாயனங்களை கலந்து அதை பஞ்சு போல் மாற்றுவார்கள்.

இந்த பஞ்சு, பழுப்பு (Brown) நிறத்தில் இருக்கும். வெள்ளையா இருந்தாத்தான இப்ப நீங்க எந்த பொருளையும் வாங்குவீங்க, அரிசி முதல் திருமணம் முடிக்கும் பையன் வரை.

இந்த பஞ்சை பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாற்ற பல Bleaching Agent Chemical களை பயன்படுத்துவார்கள் CHLORINE DI OXIDE ஆல் Bleach செய்தவுடன், அந்த பஞ்சு பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும். 

இப்பொழுது நாப்கினை தயாரிக்க முதல் layer ஆக Non Oven ஐ எடுத்துக் கொள்வார்கள், பிறகு வெண்மை ஆக்கிய பஞ்சை எடுத்து அதில் SUPER ABSORBANT POLYMER (SAP) என்னும் ரசாயனத்தை கலப்பார்கள். இது எதற்கு என்றால் உதிர திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றிவிடும்.

எந்தளவு ஈர்க்கும் என்றால், இந்த SAP தன்னை விட 30 to 60 மடங்கு திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றும் வல்லமை பெற்றது. இன்னும் Absorbing Capacity ஐ அதிகரிக்க மெலிசான நாப்கின்களில் Rayon chemical பயன்படுத்துவார்கள்.

பிறகு கடைசி layer ஆக Plastic பயன்படுத்துவார்கள். அப்பொழுதுதான் உதிர திரவம் நாப்கினைத் தாண்டி வெளி வராது.

மேலும் இதில் உதிர நாற்றம் சிலருக்கு பிடிக்காது என்பதற்காக அந்த வாசனையை மாற்ற ரசாயன நறுமணப்பொருட்கள் Fragrance, Deodorant சேர்க்கப்படுகிறது. 

வெண்மையா இருக்க CHLORINE DI OXIDE, வாசனையா இருக்க Chemical Fragrance, இன்னும் பல ரசாயனங்கள் இதில் சேர்த்து ஒரு வழியாக அந்த மூன்று layerகளும் தயாராகிறது.

பிறகு இந்த மூன்று layerகளும் chemical gum கொண்டு ஒட்டப்பட்டு அழகான முறையில் பேக் செய்யப்பட்டு உங்கள் இல்லங்களில் கண்களுக்கு விருந்தாய் ஆடலாம் ஓடலாம் விளையாடலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது. பணத்தை மட்டும் வாழ்கையாக நினைத்து அதன் பின்னால் ஓடும் நம் மக்களுக்கு இதெல்லாம் தெரியுமா? வாய்ப்பே இல்லை, தெரியாது வாங்கி பயன்படுத்துவார்கள்.

அப்பஞ்சை CHLORINE DI OXIDE கொண்டு Bleach செய்தார்கள் அல்லவா, அனைத்தும் வெண்மையாக வாங்கி பழக்கப்பட்ட உங்களுக்கு, அதன் பரிசாய் Bleaching process-ன் by product ஆக ஒரு CHEMICAL தங்கிவிடுகிறது.

DIOXIN என்னும் மிகக் கொடிய நஞ்சு. எந்த அளவு கெடுதல் என்றால், Dioxin ஹார்மோன்களை ஏமாற்றி உடலில் ஒரு செல்லினுடைய NUCLEUS-ற்குள் நுழைந்து DNA sequence-ஐ தூண்டிவிட்டு, ஜீன்களையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது என்கிறார்கள் உலக ஆராய்ச்சியாளர்கள்.

இப்பொழுது SANITARY NAPKIN பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பேராபத்துக்களை பார்ப்போம்.

நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

  • கட்டுரை தொடக்கப்பகுதியில் DIOXIN ஐ பற்றி கூறினேன் அல்லவா. அதே Dioxin தான் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKIN னிலும் உள்ளது.
  • ஒரு உயிர், அடுத்த தலைமுறை உருவாகும் இடத்தில் நீங்கள் இவ்வளவு கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த நாப்கினை வைத்தால் எப்படி அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக இருக்கும்?
  • Sanitary Napkin ஐ நீங்கள் பிறப்பு உறுப்பு பகுதியில் வைக்கும் போது அதில் ஒளிந்துள்ள பூதம் DIOXIN என்னும் கொடிய நச்சு அழகாக கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி பெண்களை பதம் பார்க்கிறது. மேலும் இது மூத்திரக்குழாய் மற்றும் மலவாய் வழியே உடல் முழுக்க பரவி பெண்கள் உடலை ஆக்கிரமிக்கிறது.

பிறகு என்ன ? DIOXIN ற்கு expose ஆன காட்டு விலங்குகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலமைதான் நம் பெண்களுக்கும்.

இப்படி உங்கள் உடலில் நுழைந்த dioxin 7 முதல் 11 ஆண்டுகள் வரை தங்கியிருந்து உங்கள் உடலை நாசமாக்கும்.

  • ஹார்மோன்களுடன் விளையாடத் துவங்கும் (Hormonal Imbalance)
  • சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது
  • இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி
  • சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)
  • கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)
  • கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)
  • ௮ - கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)
  • தைராய்டு (Thyroid)
  • கல்லீரல் வேலையில் மாறுபாடு
  • ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு
  • வெள்ளைப்படுதல்
  • தோல் நோய்கள்
  • Toxic Shock Syndrome (திடீர் மரணம்)
  • நீரிழிவு (DIABETS)
  • மன அழுத்தம் (Depression)
  • கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)
  • குழந்தையின்மை (Fertility problems)
  • மார்பக புற்றுநோய் (breast cancer)
  • கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)

இன்னும் இன்னும், உலக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்ட பல பேராபத்துக்கள் இதில் உள்ளது. அனைத்தையும் விளக்க இந்த ஒரு கட்டுரை போதாது.

நீங்களே சிந்தியுங்கள், நம் நாட்டில் பெண்கள் என்ன புகைப்பிடிக்கிறார்களா? அல்லது மதுப் பழக்கத்திற்குத்தான் அடிமையாகி உள்ளார்களா? எதுவுமே இல்லை. பிறகு ஏன் இவர்களுக்கு புற்றுநோய் (Cancer) வர வேண்டும்???

அனைத்திற்கும் காரணம் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKINதான். இப்பொழுது நாப்கினால் Environment ற்கு ஏற்படும் ஆபத்துக்களை பார்ப்போம்.

நாப்கினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு

நாப்கினை தூக்கி எறிந்து விடுகிறார்கள் ஆனால் இது மக்கிப்போக 500 முதல் 800 ஆண்டுகள் ஆகும்.

Highly toxic emission (தொடர்ந்து நச்சை வெளியேற்றும்)

1 நாப்கின் 4 Plastic carry bag ற்கு சமம். ஒரு பெண் மாதம் 50 plastic bag ஐ வெளியேற்றுகிறார். நம் நாட்டில் பெண்கள் வருடத்திற்கு 7.020 மில்லியன் நாப்கினை பயன்படுத்துகிறார்கள். இதில் உள்ள SUPER ABSORBANT POLYMER சாக்கடையில் அடைத்துவிடும். இதை சுத்தம் செய்பவர்களுக்கு, ஆஸ்துமா, TB, தோல் நோய்கள், கண் பிரச்சனைகள் வருகிறது. சுத்தம் செய்யும் போது திடீர் மரணமும் ஏற்படுகிறது.

ஒரு பெண் தனது வாழ்நாளில் 6000 நாப்கினை பயன்படுத்துகிறார்கள்.

நம் நாட்டில் பருவ வயதை எட்டி பூப்பு முதல் பேரிளம் வரை 355 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை 355 மில்லியன் பெண்கள் நாப்கின் பயன்படுத்தினால் வருடத்திற்கு 58 பில்லியன் நாப்கின் Pads வெளியேறும்.

இது பல நூறு வருடங்கள் மண்ணில் இருந்து வியாதிகளை பரப்பி வரும். இதை எரித்தால், அதில் இருந்து கொடிய நச்சு Dioxin வெளியேறி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களையும் சீரழித்து விடும்.

இந்த Dioxin fatty tissue வில் ஒட்டிக்கொண்டு உணவுச்சங்கிலிகளில் உலா வருகிறதாம். முக்கியமாக அனைத்து அசைவ உணவுகளில் இது இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

அதற்கு முன், நம் நாட்டில் எத்தனை பெண்கள் SANITARY NAPKIN பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம். நம் நாட்டில் பருவ வயதை எட்டி பூப்பு முதல் பேரிளம் வரை 355 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். அதில் 42.6 மில்லியன் பெண்கள் நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு Survey கூறுகிறது. 

இந்த கட்டுரை மூலம் நம் பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkin எந்த அளவிற்கு ஆபத்தானது என்று அனைவரும் உணர்ந்திருப்பீர்கள்.

இதை பற்றி எதுவும் தெரியாமல் இன்னும் பல பெண்கள் கடைகளில் கிடைக்கும் நச்சு ரசாயன Sanitary Napkin களை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 100 ல் 99 பெண்களுக்கு கருப்பை பிரச்சனை உள்ளது.

பெண்களே ஒவ்வொரு முறை நாம் நாப்கினை பயன்படுத்தும் போது, அடுத்த தலைமுறைக்கு கொள்ளி வைக்கிறோம் என்பது நினைவிற்கு வரட்டும்.

(ஹீலர் இ. ரா. மதிவாணன் பதிவிலிருந்து எடுத்து, தொகுத்தது) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com