உங்கள் தலைமுடி நீளமாக வளரவும் உதவும் அருமருந்து இதுதான்!

முதலில் கீரையைச் சுத்தம் செய்து உலர வைத்து, வாணலியில் போட்டு  அதனுடன் நெய்விட்டு நன்றாக வதக்கவும்.
உங்கள் தலைமுடி நீளமாக வளரவும் உதவும் அருமருந்து இதுதான்!

கீரை :  கரிசலாங்கண்ணிக் கீரைத் துவையல் 

தேவையான பொருட்கள் : கரிசலாங்கண்ணிக் கீரை ஒரு கட்டு (200 கிராம்), மிளகு - 1 ஸ்பூன் எலுமிச்சை (பழச்சாறு தோலோடு) - 2, நெய் - 2 ஸ்பூன், உப்பு -  தேவையான அளவு

செய்முறை : முதலில் கீரையைச் சுத்தம் செய்து உலர வைத்து, வாணலியில் போட்டு  அதனுடன் நெய் விட்டு நன்றாக வதக்கவும்.

மிளகை லேசாக வறுத்து அத்துடன் உப்பு, எலுமிச்சைச் பழச்சாறு கலந்து கீரையுடன் சேர்த்து நன்கு அரைத்து துவையலாக்கி தினமும் சாப்பாட்டில் நிறைய எடுத்து கொண்டால் ரத்தசோகை குணமாகும். முடியும் நீளமாக வளரும் அருமையான துவையல்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com