மருத்துவம்

தடைபட்ட மாதவிலக்கை தகர்த்தெறியும் அருமருந்து

கோவை பாலா

தேவையான பொருட்கள்

வெங்காயத் தாள் சாறு   -  250 மி.லி

கருஞ்சீரகம்.                     -   100 கிராம்

கருப்பு எள்.                       -     100 கிராம்

செய்முறை

முதலில் வெங்காயத் தாளை எடுத்து சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தாளை மிக்ஸியில் போட்டு அரைத்து மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும். கருஞ்சீரகம் மற்றும் கருப்பு எள்ளை சுத்தப்படுத்திக் கொள்ளவும் பின்பு அந்தசாறுடன் கருப்பு எள் மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி அதனை நன்கு உலர வைக்கவும். நன்கு உலர்ந்தப் பின்பு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் தடைபட்ட மாதவிலக்கை தகர்த்தெறிய உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து மாதவிலக்கு வராத சமயங்களில் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து காலை மாலை என இரண்டு வேளையும் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரவும். தொடர்ந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு குறைபாடு சீராகும்.

குறிப்பு

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக் கூடாது.

மேற்கூறிய சூரணம் துணை உணவாக பயன்படக்கூடியது. நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell: 96557 58609,75503 24609

Covaibala15@gmail.com 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT