ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தாயகம் திரும்பினார். தில்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையில் அவர் தந்தை தெரிவிக்கையில் எனது மகளுக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை, என் வாழ்வில் இது மறக்க முடியாத தருமாக இருக்கும் என்றார்.