நடிகர் ரஜினியின் மகள் செளந்தர்யாவுக்கும் - தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் லீலா பேலஸ் ஹோட்டலில் இனிதே திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி, முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, நடிகர் கமல்ஹாசன், வைகோ, மோகன் பாபு, விஷ்ணு மஞ்சு, லட்சுமி மஞ்சு , ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஏ.வி.எம். சரவணன், நக்கீரன் கோபால், அட்வகேட் மோகன், பி. வாசு, செல்வராகவன், கஸ்தூரி ராஜா, கலைப்புலி தாணு, ஏ.சி. சண்முகம், கலைஞானம், தமிழருவி மணியன், வைரமுத்து, மதன் கார்க்கி, அதிதி ராவ், ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், முத்துராமன், தயாநிதி அழகிரி, துஷாந்த் ராம்குமார், கே.எஸ். ரவிக்குமார், லதா சேதுபதி, குட்டி பத்மினி, பழனி பெரியசாமி, மணிரத்னம், சுஹாசினி, சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், பரந்தாமன் தாணு, திருநாவுக்கரசு, கஜராஜ், நல்லி குப்புசாமி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.