கர்நாடக தேர்தல்: பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோடு ஷோ - புகைப்படங்கள்
DIN
பிரதமர் மோடி மீது பொதுமக்கள் மலர்களை தூவி வரவேற்ற பொதுமக்கள்.பிரச்சாரத்தின் போது மோடி எழுப்பிய, பாரத் மாதா கீ ஜெய், ஜெய் பஜ்ரங் பலி ஆகிய கோஷங்களை ஒலிபெருக்கி மூலம் வழிநெடுக ஒலிக்க செய்தனர்.சுமார் 26 கிமீ தூரம் திறந்த வாகனத்தில் நின்றவாறு பயணித்து 13 சட்டப்பேரவைத் தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.கர்நாடக தேர்தல் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.பாஜக தொண்டர்கள் பலர், மோடியின் முகமூடி அணிந்தும், ஹனுமான் வேடமணிந்தும் பேரணியில் பங்கேற்றனர்.மோடியை வரவேற்கும் விதமாக சாலையின் இரு புறங்களிலும் நின்றிருந்து மக்கள் 'மோடி', 'மோடி' என வழிநெடுக கோஷம் எழுப்பினர்.பெங்களூரில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் மோடி நேற்று திறந்த வாகனத்தில் தொகுதிகளில் ஊர்வலம் சென்றார்.பெங்களூரில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் மோடி நேற்று திறந்த வாகனத்தில் தொகுதிகளில் ஊர்வலம் சென்றார்.நாளையுடன் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது.