திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை - புகைப்படங்கள்
DIN
தமிழத அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெயசீலன், தமிழறிஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பேத்தி மகிழினி எழுதிய 'அட்வெஞ்சர்ஸ் ஆஃப் சிங் ஷேங் இன் மிஸ்ட்ரி ஐலேன்ட்' புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.குறளோவிம் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.திருவள்ளுவர் தினத்தையொட்டி திருக்குறள் நாள்காட்டி, திருக்குறள் ஓவியக்கால பேழை புத்தகமும் முதல்வர் வெளியிட்டார்.