நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் ரூ.4,486 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களை தொடக்கி வைத்தும், மேலும் ரூ.3, 640 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவ படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.மேடையில் உரையாற்றும் போது பிரதமர், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி தனது உரையைத் தொடக்கினார்சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விழுப்புரம் - திருவாரூர் வரையிலான மின்மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கல்லணை புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் ஆகியோர் கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். உடன் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கி கெளரவிப்பு.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத பிரதமர் அர்ஜூன் எம்.பி.டி. MK-IA ரக கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.கைகோர்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம்.