பெருந்தலைவர் காமராஜ் 118வது பிறந்த நாள் - புகைப்படங்கள்
DIN
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.பெருந்தலைவர் காமராஜரின் 118ஆவது பிறந்தநாள் முன்னிட்டு அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் கடம்பூர் ராஜு, அமைச்சர் பாண்டியராஜன், அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தமிழகத்தில் நீர்வள மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தும், பல அணைகளைக் கட்டிய பெருமைக்குரியவர் பெருந்தலைவர் காமராஜ்.திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக; சீர்காழியில் பெருந்தலைவர் காமராஜர் 118 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 118 வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.ஊத்தங்கரை சந்திப்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் ஒன்றிய குழு தலைவரும்; வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ஆறுமுகம் தலைமையில்; காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.மார்த்தாண்டத்தில் காமராஜர் திருஉருவ படத்துக்கு மரியாதை செலுத்திய எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சியினர்.ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 118ஆவது பிறந்தநாளை முன்னிட்டு; மணிகூண்டு அருகே அவரது உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பஸ் நிலையம் அருகே குமரி மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் காமராஜரின் 118 வதுபிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.காமராஜரின் 118 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.விருதுநகரில் பெருந்தலைவர் காமராசர் 118-வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பெரும் தலைவர் காமராஜர் 118 வது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.