நாட்டின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கெளடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியேற்றுள்ளார்.