முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் அண்ணா சாலையிலிருந்து புறப்பட்டு, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைந்தது. இதில் எம்.பி. கனிமொழி, திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, நீலகிரி எம்பி ஆ ராசா, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.