வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டதால் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தங்கை பிரியங்காவுடன் வந்தார். வேட்டி, சட்டை அணிந்து வந்த ராகுலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் நோக்கி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்தில் பிரியங்கா மற்றும் உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.