செய்திகள்

'ஐஎன்எஸ் விக்ராந்த்' போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அரசு பொதுத் துறை நிறுவனமான, 'கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்' இந்த கப்பலை உருவாக்கியது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அரசு பொதுத் துறை நிறுவனமான, 'கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்' இந்த கப்பலை உருவாக்கியது.
மொத்தம், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், 860 அடி நீளமும், 203 அடி அகலமும் உடையது.
மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த கப்பல் பிரத்யேக வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
'மிக்29கே' ரக போர் விமானங்கள், கமோவ் 31, எம்எச் 60ஆர் ரக ஹெலிகாப்டர்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள், இலகுரக விமானங்களை இயக்கும் வசதி இந்த கப்பலில் உள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த்தை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் மிக குறுகிய தூரத்தில் விமானம் மேல் எழுப்பி செல்லும் நவீன, 'ஸ்டோபார்' தொழில்நுட்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொச்சி கடற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கடற்படை கொடியில், இருந்த ஜார்ஜின் சிவப்பு பட்டை நீக்கப்பட்டு, சத்ரபதி சிவாஜி மகாராஜின் முத்திரை இணைக்கப்பட்டுள்ளது.
30-க்கும் மேற்பட்ட விமானங்களையும் சுமந்து செல்லக்கூடிய திறன் படைத்தது ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் அக்னி வீரர்களுக்கான தனித்தனி அறைகள் உள்ளன.
இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல்.
உள்நாட்டிலே விமானம் தாங்கி போர் கப்பலை வடிவமைத்து உருவாக்கியதன் வாயிலாக அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT