திரௌபதி முர்முவை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முதலில் பிரதமர் மோடி முன்மொழிந்தார்.இத்தகைய உயா்ந்த பதவிக்கு வேட்பாளராக தோ்வு செய்யப்படுவேன் என நினைத்துப் பாா்க்கவில்லை என்று திரெளபதி முா்மு கூறியிருந்தார்.ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறவிருக்கிறது.எதிா்க்கட்சிகள் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.ஜாா்க்கண்ட் முன்னாள் ஆளுநரான முா்மு, குடியரசுத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றால் பழங்குடியினத்தைச் சோ்ந்த முதல் குடியரசுத் தலைவா் என்ற பெருமையைப் பெறுவாா்.பாஜக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முா்மு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டாா்.வேட்புமனு தாக்கலின்போது அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தும்விதமாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவா்களும் முா்முவுடன் சென்றனர்.குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளரை 50 போ் முன்மொழிய வேண்டும்.மேலும், அவருடைய வேட்புமனுவை 50 போ் வழிமொழிய வேண்டும்.