நந்தனத்தில் அமைக்கப்பட்டுள்ள 44-வது சென்னை புத்தகக் காட்சியில் 240 - 241 எண் கொண்ட ஸ்டால்களில் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி’ அரங்கு.நம்ப முடியாத அளவுக்குக் குறைந்த விலையில் கிடைக்கின்றன தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணியின் வெளியீடுகள்.புத்தகம் படிக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் வாசகர்கள் கூட்டம்.புத்தகக் காட்சி பிப்ரவரி 24ஆம் முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும்.காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடைபெறும்.இளைஞர்கள், முதியோர், கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக புத்தகக் காட்சிக்கு வந்திருந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர்.பல்வேறு புத்தகப் பதிப்பகங்கள் விற்பனையாளர்கள் புத்தகக் காட்சியில் பங்கேற்பதால், தமிழகத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய புத்தகக் காட்சி இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் வாங்குவர்களுக்கு சலுகை விலையில் விற்பனையாகும் புத்தகங்கள்.புத்தகங்களை பார்வையிடும் வாசகர்கள்.குழந்தைகள் விரும்பிப் படிக்கக்கூடிய சாகசங்கள் நிறைந்த புத்தகங்கள்.புத்தகக் காட்சியில் வழக்கமாக வழங்கப்படும் 10 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.சலுகை விலையில் ரூ.100க்கு விற்பனையாகும் புத்தகங்கள்.அனுமதி கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.