கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.தினமும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரிப்பு சாமானிய மக்களை கவலையடைய செய்துள்ளது.எரிபொருள் நிரப்பும் ஊழியர்.அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் பிற பொருள்களின் விலையும் உயரும் சூழல் உருவாகியுள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் தொடர் விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் வாகன ஓட்டிகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.